Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறு சிறு குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது – திருச்சியில் அமைச்சர் பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்.. 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் சொர்க்கவாசலை திறப்பதற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்து சமய அறநிலைத்துறையும், வருவாய் துறையும், மாநகராட்சியும், மக்கள் நல்வாழ்வு துறையும், காவல்துறையும், தீயணைப்பு துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து கடந்த காலத்தில் எங்கு சிறு சிறு குறைகள் இருந்ததோ அவற்றை அனைத்தையும் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது.

108 திவ்ய தேசங்களிலும் எங்கு பார்த்தாலும் கோவிந்தா என்ற நாமத்தோடு அனைத்து திருக்கோயில்களிலும் பரமபதம் வாசல் இன்றைக்கு புண்ணியம் சேர்க்கின்ற நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என இவைகளுக்கு முன்னுரிமை தந்து அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையுடன் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *