Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதம் இழப்பீடு கேட்டுள்ள விவசாயிகள்

துறையூர் அருகே எரகுடி பகுதியில் சூறைக்காற்றில் வாழை மரங்கள் முறிந்து சேதம், பல லட்சம் இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை..

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிலியபுரம் அருகே எரகுடி ஊராட்சியில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர், தற்போது வாழைத்தார்கள் வெட்டும் தருவாயில் உள்ள நிலையில் நேற்று அடித்த சூறாவளி காற்றின் காரணமாக சுமார் 1500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்த

முறிந்தது, இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்,

எனவே தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பயிர் சேதத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர், 

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இழப்பீடு வழங்கினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *