Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அதிக கட்டணம் வசூல் – வயலூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி முற்றுகை!!

திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள பாரதியார் நகரில் இருக்கும் காவேரி கிலோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது வரை ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள பாரதியார் நகரில் இருக்கும் காவேரி கிலோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், ஆன்லைன் முறையில் நடைப்பெற்றாலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு அது பெரும் சிரமமாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்

Advertisement

மேலும் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *