Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பூங்காவில் உயிரிழந்து கிடந்த இளைஞர் போலீசார் விசாரணை

No image available

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக தில்லை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்த இளைஞர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தென்னூர் ஹிதாயத் நகரைச் சேர்ந்த முகமது இக்பால் மகன் முகமது இஸ்மாயில் ( வயது 32), இவருக்கு ஸ்லிமா என்ற மனைவியும், 6 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர் குவைத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்துள்ளார்.

இந்நிலையில் முகமது இஸ்மாயில் தினமும் மது அருந்திவிட்டு மது போதையில் குழுமிக்கரை ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் படுத்து இருப்பது வழக்கம். இன்றும் வீட்டில் சொல்லாமல் வந்து விட்டதால் அவருடைய உறவினர்கள் எல்லா பூங்காவில் தேடி பார்த்த  போது இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து முகமது இஸ்மாயில் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது. இளைஞரின் இறந்தற்கான காரணம் குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *