விவசாய நிலங்களை அபகரிக்கும் கந்துவட்டி முதலாளிமீது நடவடிக்கை எடுக்ககோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவல் ஆணையரிடம் மனு.திருச்சி தில்லைநகர், 11வது குறுக்குத்தெருவில் வசிக்கும் வடிவழகன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்துவருகிறார்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற முடியாத விவசாயிகள் பலரும் வடிவழகனிடம் இலட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.
தன்னிடம் கடன்பெறும் விவசாயிகளிடம் அதிக வட்டி வசூலிப்பதுடன், பத்து லட்சம் ரூபாய் கடன்பெற்றால் வட்டியுடன் 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கடன் பெற்றவர்களிடம் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து பெற்று அவர்களுடைய நிலத்தையும், வீட்டையும் அபகரித்து கொள்ளும் அடாவடி செயலில் ஈடுபட்டுவருவதாக
கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பலமுறை விவசாயிகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நிலங்களை அபகரிப்பு செய்துள்ள வடிவழகனிடமிருந்து தங்களது நிலத்தையும், இடத்தையும் மீட்டுத்தரக்கோரி விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
150 விவசாயிகளை மேற்பட்டவர்களை ஏமாற்றி சுமார் 150 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து தன்னுடைய பெயரில் மாற்றம் செய்து வைத்துள்ளதாகவும்,
இது ஒருபுறம்இருக்க அரசுக்கு சொந்தமான இடத்தையே தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து விற்பனை செய்யும் கொடுமையும் அரங்கேறி உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
னமேலும் வாங்கிய பணத்தை வட்டியுடன் செலுத்த சென்றால், விவசாயிகளை அடியாட்களை கொண்டு மிரட்டி சொத்தை அபகரித்துக் கொண்டதுடன் கூடுதல் விலைக்கு அவர்களிடமே விற்பனை செய்யும் துணிகரமும் அரங்கேறி உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஏமாந்த விவசாயிகள், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா படிப்பறிவு இல்லாத விவசாயிகளை ஏமாற்றி சொத்தை அபகரித்த வடிவழகனிடமிருந்து நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments