Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரயில்வே கேட் ஊழியரை தாக்கியவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரத்தில் தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு சமுத்திரத்தில் ரயில்வே கேட் பணியாளராக வேலை செய்பவர் உதயகுமார் 34. நேற்று முன்தினம் இரவு சுமார் 10 :15 மணிக்கு மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும்

ஸ்பெஷல் ரயில் வர இருந்த நிலையில் கேட் மூடப்பட்டுள்ளது. அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த சமுத்திரத்தைச் சேர்ந்த சுரேஷ் – 21 மற்றும் பாக்கியராஜ் – 24 இருவரும் இருசக்கர வாகனத்தை சாய்த்தபடியே தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது கேட் கீப்பர் ரயில் வரப்போவதாகவும் அதனால் செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த இருவரும் ரயில்வே ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் இவர்களை விலக்கி விட்டு சென்றனர். இச்சம்பவம் பற்றி ரயில்வே ஊழியர் உதயகுமார் ரயில்வே போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சுரேஷ்சை போலீசார் தேடி வருகின்றனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *