Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துறையூரில் ஆம்புலன்ஸ் டிரைவர், கர்ப்பிணி உதவியாளர் மீது தாக்குதல் – அதிமுகவினர் மீது குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வரும் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் காத்திருந்தனர், அப்பொழுது
விஷ்வா, வேங்கடத்தனூர் என்பவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொலைபேசியில் வேங்கடத்தனூர், நீல கரையான் என்பவர் எம் எஸ் கே மஹால் அருகே மயங்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளதாக கூறுகின்றனர், உடனே 108 ஆம்புலன்ஸ் தீயணைப்பு நிலையம் அருகே இருந்து துறையூர் பேருந்து நிலையம் வழியாக நோயாளியை மீடபதற்காக காலியாக உள்ள 108 ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் உதவியாளர் எட்டு மாத கர்ப்பிணி ஹேமலதா ஆகியோர் சென்றுள்ளனர்,

அப்பொழுது அதிமுக தொண்டர்கள் அடையாளம் தெரிந்த 5 நபர்களும், அடையாளம் தெரியாத 15  நபர்கள்  108 ஆம்புலன்சை வழிமறித்து இருவரையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளனர், உட்பகுதியில் உள்ளே ஏறி ஸ்கிரீன் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் துறையூர், கனரா பேங்க் காலணியை சேர்ந்த செந்தில், துறையூர், கலிங்கம்முடையான் பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த ஹேமலதா (8மாத கர்ப்பிணி) ஆம்புலன்ஸ் உதவியாளர் ஆகியோர்களை அடையாளம் தெரிந்த ஐந்து நபர்களும் அடையாளம் தெரியாத 15 நபர்களும் தாக்கி 108 ஆம்புலன்ஸஸை சேதப்படுத்தி விட்டதாக கூறினர், அடிபட்ட இருவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளனர், அரசு மருத்துவமனையில்  துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதிமுக கூட்டத்தில் அதிமுகவினரே மயங்கி விழுந்ததாக தொலைபேசியில் அழைத்து அவ்வழியாக வரும்பொழுது அதிமுகவினரே தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *