Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

POCSO வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை- திருச்சி நீதிமன்றம் அதிரடி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த சிறுமியிடம், சரவணன் (30/25), துவாக்குடி மலை என்பவர் ஆசை வார்த்தை கூறி தொடர்பில் இருந்தார்.2019 டிசம்பர் 17ஆம் தேதி, சிறுமியை ஆள்நடமாட்டம் அற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று தகாத உறவு வைத்துக்கொண்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு எதிரி சரவணன் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.இந்த வழக்கு திருச்சி மகிளா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் சுமதி வாதித்த நிலையில், நீதிபதி சண்முக பிரியா இன்று (25.08.2025) தீர்ப்பு வழங்கினார். அதன்படி, எதிரி சரவணனுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தமைக்காக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் அவர்களை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகிலா செ.செல்வநாகரத்தினம் அவர்கள் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *