Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த விவகாரம் – தனியார் நிர்வாகம் மீது புகார்

திருவெறும்பூர் அருகே பாதாள சாக்கடை அடைப்பை எடுத்த பொழுது விஷவாயு தாக்கி இறந்த இரண்டு ஒப்பந்த தொழிலாளர்களின் இறப்பிற்கு காரணமன தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் மற்றும் அந்த பகுதி பொறுப்பாளர் மீது திருச்சி மாநகராட்சி இளநிலை பொறியாளர் புகார் அளித்துள்ளார்.

திருவெறும்பூர் அருகே உள்ள முத்துநகர் நியூ டவுன் கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என அதனை சரி செய்வதற்கு திருச்சி மாநகராட்சியில் சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் என்னும் தனியார் நிறுவன ஊழியர்கள் புதுக்கோட்டை திருவாப் பூரை சேர்ந்த அய்யாவு மகன் ரவி 38 சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு 32 ஆகிய இருவரும் இறங்கி அடைப்பை எடுக்க முயன்ற பொழுது விஷவாயு தாக்கி இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதன் பிறகு அவர்களின் உடலை திருவெறும்பூர் திணைப்பது துறையினர் உதவியுடன் மீட்டு திருவெறும்பூர் போலீசார் துவாக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர் இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரசாத்57 இவர் திருவெறும்பூர்காவல் நிலையத்தில் கொடுத்த புகார் திருச்சி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனமான சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஊழியர்கள் ரவி பிரபு ஆகிய இருவரும் போதிய உபகரணங்கள் இல்லாமல் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்வதற்காக இறங்கிய போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

பாதாள சாக்கடை பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அஜாகிரதியாக செயல்பட்டதாக சூப்பர்வைசர் இளவரசன் மேலாளர் கந்தசாமி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் திருச்சி கலெக்டர் சரவணன் பாதாள சாக்கடை அடைப்பை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு விஷவாயு தாக்கி இறந்த ரவி மற்றும் பிரபுவின் உடலை இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அகற்றுவதற்கு உத்தரவிட்டது சட்டப்படி குற்றம் என்று அவர்கள் மீது மனித மலத்தை மனிதன் அகற்றுவது கூடாது என கூறி 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 30 லட்சம்

நிவாரணம் உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பிரேத பரிசோதனை முடிந்த உடனே அவர்களுக்கு உரிய 30 லட்சம் காசோலை வழங்க வேண்டும் மேலும் அவர்களுக்கு உரிய காப்பீடு தொகையான 20 லட்சத்தையும் பெற்று தர வேண்டும் அது மட்டுமல்லாது மாநகராட்சி காண்டாக்ட் நிறுவனமான சுப்பையாகாண்டாக்ட் நிறுவனம் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதுவரை இறந்தவர்களின் உடலை பிரதி பரிசோதனை செய்யாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் உடலை வாங்குவதற்கு இறந்தவர்களின் உறவினர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து நேற்று இரவே மருத்துவமனையில் திருச்சி ஆர்டிஓ தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் சவக்கடங்கில் இருவர் உடலும் வைக்கப்பட்டுள்ளது மீண்டும் இச்சம்பவம் குறித்து இன்று காலை 10 மணிக்கு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *