மணப்பாறை அருகே வடக்கு சேர்ப்பட்டியில் வசிக்கும் ராஜாராம் மற்றும் அவரது சின்னம்மாள் சித்தி ஆகியோர் கூட்டு குடும்பமாக வாழ்த்துகின்றனர் அவர்களுக்கு சொந்தமான 74 ஏக்கர் இடம் காலி மனையாக உள்ளது அந்த இடத்தில் கருவேல மரங்கள் உள்ளது 3 ஆண்டுக்கு ஒரு முறை குத்தகைக்கு விட்டு விடுவார்கள் அதில் பல லட்சம் ரூபாய் வருமானம் வந்து மூன்று குடும்பங்களும் பிரித்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர்
இதற்கு இடையில் ராஜாராம் அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் தற்பொழுது அவருடைய இடத்தில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனின் கணவர் திமுகவைச் சேர்ந்த ஆண்டாள் மணி என்பவர் ராஜாராம் இடத்தில் முள்வேலி கருவ மரங்களை வெட்டி எடுத்துள்ளார் இதை கேட்க சென்றார் ராஜாராம் என்னுடைய இடத்தில் ஏன் வெட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் அமைச்சர் நேருவின் ஆள் அவரிடம் நான் சொல்லிவிட்டேன் வெட்ட சொல்லிவிட்டார் என்று மிரட்டி உள்ளார் இதனால் மனமுடைந்த ராஜாராம் மணப்பாறை காவல் நிலையத்தில்
செப்டம்பர் 1.ஆம் தேதி. புகார் அளித்துள்ளார்
புகார் அளித்தும் பலமுறை காவல்துறைக்கு சென்று இதுவரை எந்த நடவடிக்கை மணப்பாறை காவல்துறையினர் எடுக்கவில்லை இதன் இடையில் நேற்று திருச்சி.
எஸ் பி ஆபிஸ் க்கு சென்று புகார் கொடுத்துள்ளார் நேருவின் ஆள் என்பதால் யாரும் எந்த நடவடிக்கை எடுக்காமல் திணறி வருகின்றனர் இதனால் மனம் உடைந்த ராஜாராம் திமுகவின் அராஜப்போக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார் ஏற்கனவே மணப்பாறையில் திமுகவினர் கனிம வளங்களை கொள்ளை அடித்து வருவது
நமது செய்திகள் தந்துள்ளோம் தற்பொழுது கருவேல மரங்களை திமுகவினர் கொள்ளை அடித்து மிரட்டி வருகின்ற சம்பவம் மணப்பாறையில் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments