கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள்
http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலமாக இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். இந்த துணை கலந்தாய்வுக்கு பொது விண்ணப்பத்தினை இடைநிறுத்திய மற்றும் சமர்ப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் நேரடியாக கோயமுத்தூரில் உள்ள வேளாண் பல்கலைகழகத்திற்கு சென்று முதன்மையர் (மாணவர் சேர்க்கை) அவர்களை மாணவர் சேர்க்கைக்கு அனுகலாம். மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 10ம் தேதி கடைசி நாள் ஆகும். மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே. சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் கூடுதல் தகவல்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளின் வேளாண் பட்டயப் படிப்பிற்கான காலியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை மற்றும் காலியிட விவரங்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments