திருச்சியிலிருந்து இன்று காலை பெங்களூர் செல்லவிருந்த இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது பயணிகள் அனைவரும் விமானத்தில் உள்ளே ஏறி அமர்ந்து வந்தனர்.
அந்த விமானத்தில் பெங்களூர் செல்ல பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவர் விமானத்தின் உள்ளே வந்து அமர்ந்த பொழுது அவசர வழி கதவை திறந்ததாக கூறி இண்டிகோ பணியாளர்கள் அவரை விமானத்திலிருந்து இறக்கிவிட்டு திருச்சி விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இரண்டு மணி நேரம் அவரிடம்
விசாரணை நடத்தி விளக்க கடிதம் பெற்ற பிறகு காவல் நிலையத்தில் இருந்து மருத்துவர் அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments