தென் கைலாயம் என்றழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற டிசம்பர் 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் அருள்மிகு மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு மாலை 6-00 மணிக்கு

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடிஉயர செப்புக்கொப்பரையில் 300-மீட்டர் அளவுள்ள பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட திரியில் 700-லிட்டர் இலுப்பை எண்ணை. நல்லெண்ணை, நெய் ஆகியவைகளை ஊற்றி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

அதற்காக மலைக்கோட்டை தாயுமான சுவாமி சன்னதியில் மெகா சைஸ் திரி தயாரிக்கும்பணி பக்தர்களால் நடைபெறுகிறது, இந்தபணியில் 20க்கும்மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இப்பணி முடிந்ததும் மெகா திரியை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகைதீப கொப்பரையில்வைத்து நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளைகொண்டு ஊறவைத்து, பின்னர் 3ம் தேதியன்று மகாதீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீப திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை இத்திருக்கோயில் உதவி ஆணையர் அருட்செல்வன் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments