Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மழைநீர் வடிகால், OMNI பேருந்து நிலைய பணிகள்: மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ராமச்சந்திரா நகரில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி நடைபெற்று வருவதை மேயர் மு. அன்பழகன் அவர்கள், பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4 வார்டு எண் 62 ராமச்சந்திர நகர் மற்றும் டோபி காலனி கோரையார் பகுதி வரை
மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை எளிதாக வெளியேற்றுவதற்காக ராமச்சந்திரா நகர் முருகன் கோவில் முதல் சித்தி விநாயகர் நகர் கிருஷ்ணவேணி நகர் அப்துல் கலாம் நகர் மற்றும் டோபி காலனி வழியாக கோரையாறு வரை மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க திட்டமிடப்பட்டு ஒரு பகுதியாக பொது நிதியின் கீழ் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டர் அளவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி நடைபெற்று வருவதை மேயர் மு. அன்பழகன் அவர்கள், பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மீதமுள்ள பகுதிகளில் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வளாகத்தின் வெளியூர் (OMNI Bus Stand)செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் கட்டுமானபணிகளை மேயர் மு.அன்பழகன் அவர்கள் பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்துகளுக்கென தனியாக பேருந்து நிலையம் ஏதும் இல்லை.
தனியார் சொகுசு பேருந்து நிலையம் இல்லாததால், மத்திய பேருந்து நிலைய பகுதி சாலை ஓரங்களில் போக்குவரத்து பயணிகளுக்கு இடையூறாக இப்பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி வரும் நிலையினை மாற்றும் விதத்தில், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முணையம் அருகே சுமார்
4 ஏக்கர் பரப்பளவில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (OMNI Bus Stand) ரூ.17.60 மதிப்பீட்டில் 30849 சதுரடி பரப்பளவு
பேருந்து போக்குவரத்து இடம் – 142945 சதுரடி பரப்பளவு.
மொத்த பேருந்து நிறுத்த தடங்களின் 58 எண்ணிக்கையில் இயக்கப்படும். பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை – 34
காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை – 24
இத்திட்டப்பணி 85 சதவீதம் முடிவடைந்து உள்ளது. விரைவில் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும் என மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார்கள்

இந்த ஆய்வில் நகரப் நகரப் பி.சிவபாதம் செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி மண்டல தலைவர் துர்கா தேவி , செயற்பொறியாளர் வேல்முருகன், மாமன்ற உறுப்பினர் சுபா மற்றும் பலர் உடன் இருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *