திருச்சிராப்பள்ளி மாவட்டம், தா.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரிகாலி, உத்தன்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த துரைராஜ் (66), த.பெ. பிச்சை என்பவர் அவரது மகன் மணிகண்டன்(34) என்பவருடன் கடந்த 12.12.2022 அன்று தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்து விட்டு மாலை 5:50 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக கவுண்டர் தெரு சிமெண்ட் சாலை வழியாக ராஜேந்திரன் வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, கவுண்டர் தெருவை சேர்ந்த செல்லதுரை (52), த.பெ. தண்டன் கவுண்டர் என்பவர் முன்விரோதம் காரணமாக ராஜேந்திரன் வீட்டு வாசப்படி அருகே கொடுவாளுடன் நின்று கொண்டிருந்தவர்
மேற்படி நடந்து வந்து கொண்டிந்த துரைராஜ் – ஐ வழிமறித்து கையில் வைத்திருந்த கொடுவாளால் துரைராஜின் இடது கை மற்றும் தலையில் மாறி மாறி வெட்டியதில் துரைராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், இறந்து போனவரின் மகன் மணிகண்டன் என்பவர் செல்லதுரை மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரை பெற்று தா .பேட்டை காவல் நிலைய குற்ற எண்.172/22u/s341,302 IPC ன் படி 12. 12. 2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு 05.01.2023 அன்று எதிரி கைது செய்யபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணை திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (III-ADJ)நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக A.ஆனந்தன், ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (19.12.2025) திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் (III- ADJ) அவர்கள் எதிரி – செல்லதுரை (52), த.பெ. தண்டன் கவுண்டர், உத்தன்டம்பட்டி, கரிகாலி, என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 5,000 அபராதமும், வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த தா.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் திருமதி. ராதா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுவாக பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments