Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்” மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி சேர்மன்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் பணி ஆலோசனைகள்: கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பணிகள் குறித்து.

19/12/2025 அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாதிரியை வைத்து BLA-2 அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் சம்பந்தமான தீவிரப் பணிகளை ஈடுபடுத்தல். கழக ஆக்க பணிகள் குறித்து என்று கூறினார் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *