Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் “நெகிழிஅகற்றல் நாள்” 26.2.2026

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மற்றும் மாணவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் சங்கம் திருச்சிராப்பள்ளி இணைந்து 26 2.2026ஆம் தேதி “நெகிழி அகற்றல் நாள்” நிகழ்வை நடத்தினார்கள்.
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி. இராஜசேகரன், இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா மாணவர்களை நெகிழி பைகள் மற்றும் நெகிழி தண்ணீர் பாட்டில்களை அகற்ற உற்சாகப்படுத்தினர்.

இந்த நெகிழி பொருட்களை முழுமையாக அகற்றுவது எதிர்கால தலைமுறைகளுக்கான சிறந்த உலகத்தை உருவாக்க உதவும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்திரா கணேசன் குழுவின் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் சங்க அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வமாக பங்கேற்று, தங்கள் வளாகங்களில் இருந்து நெகிழி பைகள், ஒற்றை முறை பயன்பாடு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குவளைகளை அகற்றினர்.மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன்

தனித்தனியாக சேகரித்து, எரிக்காமல், மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று உறுதிமொழி எடுத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *