முன்னாள்முதலமைச்சர்கழகபொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடி யார் அவர்களின் வழிகாட்டுதலின்படி 04.06.2026 வியாழக்கிழமை இன்று லால்குடி சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தலைமை அரசு கொறடா R. மனோகரன் முன்னிலையில்லால்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் MLA அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து

லால்குடிகீழ வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மற்றும் மாந்துறையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்(R O water) தனது சொந்த நிதியில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் துவங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முன்னாள் அமைச்சர் என்.ஆர் சிவபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்எம் பாலன், சிறுபான்மையினர் நலப்பிறிவு மாநில துணை செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான், ஒன்றிய கழக செயலாளர்கள் சூப்பர் (எ) டி.என்.டி.நடேசன், வழக்கறிஞர் டி.அசோகன், டி.என்.சிவகுமார், எம்.அருணகிரி, நகர கழக செயலாளர் பொன்னி சேகர் (எ) எஸ்.சந்திரசேகர், பேரூர் கழக செயலாளர்கள் ஜேக்கப் அருள்ராஜ், ஜெய்சீலன், பிச்சப்பிள்ளை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.டி.எல்.டோமினிக் அமல்ராஜ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments