ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: கோடை காலம் தொடங்குவதற்க்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து அதிக வெப்பம் அடிப்பது காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலம் காக்கும் பொருட்டு
ஸ்ரீரங்கவிலாசம் மண்டம் அருகே நார்ச்சத்து மிகுந்த பானகமும் தொண்டைமான் மேடு அருகில் மூலிகை நீர்மோர் உபயதார்கள் மூலகம் வழங்க கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று முதல்

கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர், உள்துறை கண்காணிப்பளர் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன் தலைமை ஆசிரியர் புலவர் கிருஷ்ணா ஆகியோர்,
நீர்மோர் மற்றும் பானகம் ஜூன் மாதம் இரண்டாம்வாரம் வரை வழங்கப்படும் மேலும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் நடந்து செல்லும்போது பாதம் சுடாமல் இருக்க கோயில் வளாகம் முழுவதும் தேங்காய்நாரினால் ஆன தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது…

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments