திருச்சிராப்பள்ளி மாவட்டம், இராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மில்கேட்,பகுதியில் கடந்த 04.04.2026 அன்று சுமார் 1.350 கிலோ கஞ்சாவை சட்டவிரோதமான விற்பனைக்காக வைத்திருந்த **அலர்ட் ஆறுமுகம் (எ) ஆறுமுகம் (44)**, (HS NO.01/22), த/பெ வேலு, ஹரிபாஸ்கர் காலனி, கே.கள்ளிக்குடி, ராம்ஜிநகர், திருச்சி மாவட்டம் என்பவர் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் குற்ற எண். 155/26, U/s 8(C), r/w 20(b), (ii) (B) of NDPS Act 04.04.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் எதிரி அலர்ட் ஆறுமுகம் (எ) ஆறுமுகம் (44), த/பெ வேலு, ஹரிபாஸ்கர் காலனி, கே.கள்ளிக்குடி, ராம்ஜிநகர், திருச்சி மாவட்டம் என்பவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப, அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (06.05.26) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 45 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments