தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் சேர்கை கால அவகாசம் 31.07.2026 வரை நீட்டிப்பு.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதீப்தயாள்இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
2026-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான நேரடி சேர்கைக்கான கால அவகாசம் 31.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

8-ஆம் வகுப்பு/10-ஆம் வகுப்பு தேர்சி/தோல்வி கல்வித்தகுதியாகும்.விண்ணப்ப கட்டணம் தொகையான ரூ.50/- விண்ணப்பதாரர் Debit card / Credit card/Net banking / UPI(Gpay, Phonepe, etc.,) வாயிலாக செலுத்தலாம்.
மேலும் தொழிற்பயிற்சி நிலைய நேரடி சேர்கைக்கான விண்ணப்பத்தினை பூர்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேரில் கீழ்க்காணும் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான,

திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் – 90424 11348,
மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் – 94439 53420,
புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) – 94438 72991,
மண்ணச்சநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் – 94862 74283,
துறையூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் – 94436 44967
என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments