Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களிடம் , நீங்கள் எந்தவித தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளும் போது அதே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார் 

தமிழக முதல்வர் நோய் தடுப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து முகக் கவசத்தை அணிந்து, நோயிலிருந்து நம்மையும், நம் சமுதாயத்தையும் பாதுகாப்போம் என கூடி அங்கிருந்தவர்களிடம் கூறினார் .

கொரோனா தடுப்பூசி முகாமில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தார். பின்னர் ஒன்றிய பொதுநிதி ரூபாய் 6 லட்சத்தில் இருந்து அமைக்கப்பட்ட தார்ச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *