Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த ரயில் கட்டண சலுகை பயன்கள் பறிக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும். அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளி பெட்டிகளை உடனே இணைத்திட வேண்டும், ரயில் நிலையங்களில் மின்தூக்கி நகரும் படிக்கட்டுகளை இயக்க வேண்டும்.

பிளாட்பார கட்டணத்தை ரூ.50 என்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்சனில் கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *