Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

புதிய கல்விக் கொள்கைக்கு கண்டனம் தெரிவித்து பறையடித்து ஆர்ப்பாட்டம்!

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட விடுதலைக்கழகம், தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் பறையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் வின்சென்ட் தலைமையில் தமிழ் புலிகள் கட்சி ரமணா, ஆதித்தமிழர் கட்சி வீர முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உசேன், தமிழக தேசிய பேரியக்கம் ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *