Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் செய்பவர்களுக்கு தனி நல வாரியம் – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை

கோவை பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்க முதலாமாண்டு துவக்க விழா திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். விழாவிற்கு மாநில தலைவர் சதுரகிரி அலி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சித்திக் மாவட்ட துணை தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் ஓவியர்கள் மற்றும் பெய்ண்டர்களுக்கு தமிழகத்தில் தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து முதல்வரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி கூறினார்.

மேலும் பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் தான் அரசியல்வாதிகளை அழகாக வரைந்து மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதாகவும் கூறினார். இந்த விழாவில் பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *