Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி காவல் நிலையத்தில் கால்நடைகளை கட்டி வைத்த குடும்பம்!!

திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் கால்நடைகளை கொண்டு வந்து கட்டி குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர்.

திருச்சி தென்னூர் பாரதி நகரில் வசிப்பவர் காளியம்மாள் 40 வருடமாக அவர் அங்கே சொந்த வீட்டில் வசித்து வருகிறார் .அவர் வீட்டிற்கு முன்புறம் உள்ள பாதையை 5 அடி அகலமுள்ள பாதையை அப்துல் காதர் என்பவர் புதிதாக வீடு கட்டி அந்த ஐந்து அடி அகலமுள்ள பாதையை அடைத்து விட்டால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை வெளியே வரமுடியவில்லை. பலமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கால்நடைகளை அழைத்து வந்து கட்டி வைத்து தர்ணா போராட்டத்தில் குடும்பத்தினருடன் ஈடுபட்டார்.

பின்னர் அவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக நீீதிமன்றத்தில் காளியம்மாள் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *