நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண்

நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண்.இதைப் பற்றி வழக்கறிஞர் S.முத்துக்குமார் (வயது 43) அவர்கள் கூறுகையில் எனது மூத்த வழக்கறிஞர் திரு.பென்னட் ராஜ் ஆக இருவரும் ஒரு குற்றவியல் வழக்கில் ஆஜராகி எனது சீனியர் பென்னட்ராஜ் அவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக A1
மற்றும் A2 இருவருக்கும் மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி முன்பாக, முன் ஜாமின் மனு தாக்கல் செய்து அது அனுமதிக்கப்பட்டு மேற்படி இருவருக்கும் முன் ஜாமின் நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கின் புகார்தாரர் அஞ்சலை இதைத் தெரிந்து கொண்டு எங்கள் அலுவலகத்திற்கு அத்துமீறி நுழைந்து நீங்கள் குற்றம்ஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராக கூடாது என்றும் அப்படி மீறி ஆஜரானால் அருவா
மனையால் சங்கருத்து விடுவேன் என்று மிரட்டி அசிங்கமா அசிங்கமான கெட்ட வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த அவமானப்படுத்தினார் மேலும் மேஜையில் இருந்த சாமான்கள் அனைத்தையும் தள்ளிவிட்டார் அந்த சமயத்தில் அலுவலகத்தில் என்னுடன் சீனியர் வழக்கறிஞர் பென்னட் ராஜ் நான் மற்றும் மூன்று இளம் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர். நேற்று இது சம்பந்தமாக மாவட்ட அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்து, அதன் பேரில் CSR போடப்பட்டது. எனக்கு உறுதுணையாக குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி வெங்கட் அண்ணன்
அவர்களும், உடன் மூத்த வழக்கறிஞர் பென்னட்ராஜ் அவர்களும் இருந்தனர். மேலும் இது பற்றி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V.வெங்கட் அவர்கள் கூறுகையில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அலுவலகம் தாக்கப்படுவது தொடர் சம்பவமாக சமீப
காலமாக நடந்து வருகிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும் ஆகவே இது போன்ற விஷயங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் வழக்கறிஞர் அலுவலகம் வந்து மிரட்டிய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு வேண்டுகோள் வைக்கிறேன் என்று கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






