Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் இரவில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் – 4 பேரை கைது செய்த தனிப்படை!!

திருச்சி பாலக்கரை பகுதியில் கடந்த 21.09.2020 இரவு 7 பேர் முகமூடி அணிந்துகொண்டு நகை செய்து கொடுப்பவரை தாக்கி 8 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை இந்தியன் வங்கி அருகில் உள்ள தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் அதே பகுதியில் நகை கடைகளுக்கு நகைகளை ஆர்டர் செய்து செய்து தரும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 21.09.2020 அன்றிரவு 8 பவுன் நகையை ஆர்டர் கொடுத்தவர்களுக்காக எடுத்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் 7 பேர் கொண்ட முகமூடி அணிந்து கொண்டு அவரை பாலக்கரை இந்தியன் பேங்க் அருகே அவர் வீட்டிற்கு முன் வழிமறித்து தாக்கி 8 பவுன் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள பாலக்கரை காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்துகொண்டு பரபரப்பான பாலக்கரை பகுதியில் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை கோட்டை காவல் நிலைய உதவி ஆணையர் அபிராம் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் .மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பாஸ்கர், ஜோன்ஸ், விஜயன் மற்றும் கோபால் என்ற குஞ்சு கோபால் ஆகிய
4 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *