Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் தெருநாய்களுக்கு தங்குமிடம், ரேபிஸ் தடுப்பூசி போட மனு

திருச்சி மாவட்டத்தில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, கருத்தடை மற்றும் தங்குமிடம் வழங்கக் கோரிய மனு மீது, திருச்சி மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்றம் பதில் கேட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர் பி.கண்ணையன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்குக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பதில் மனு தாக்கல் செய்தது.

அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மாவட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனுதாரர் தெரிவித்தார். தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கும், கருத்தடை செய்வதற்கும் விரிவான செயல் திட்டம் தேவை என்று அவர் கூறினார். தெருநாய்கள் அடிக்கடி சாலை விபத்துக்களில் காயமடைவதுடன், கொடுமைக்கு ஆளாவதால், அவற்றுக்கு உரிய உணவு மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய தங்குமிடம் மாவட்டத்தில்ஏற்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *