Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மாவட்ட அரசு வழக்கறிஞரை பாராட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர்

கடந்த 03.01.2020 அன்று மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலைய எல்லையில் உள்ள கண்டமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாமிதுரை கொலை வழக்கு தொடர்பாக ரெண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கு விசாரனை மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரனை நடைடிபற்றுது.

இவ்விசாரனையில் அரசு தரப்பு வழக்கறிஞராக ராம.சேயோன் என்பவர் ஆஜரானார். மேற்படி வழக்கு விசாரனை முடிந்து கடந்த 07.04.2022 அன்று குற்றவாளிகள் இருவருக்கும் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இவ்வர்க்கில் 
ஆஜரான அரசு வழக்கறிஞர் ராம.சேயோன் நேற்று மத்திய மண்டலம், காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் துணை 
காவல் கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு கூட்டம் நடத்தினார்

அப்போது, மேற்படி அரசு வழக்கறிஞர் ராம.சேயோன் நேரில் ஆஜராகி காவல்துறை தலைவர் அவர்களிடம் வழக்கிற்குரிய தீர்ப்பு நகலை வழங்கினார். அப்போது காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பாக வழக்கினை நடத்தி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த அரசு வழக்கறிஞரை பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *