Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மழைக்கு ஒதுங்கி நின்ற பெண்ணிடம் செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞர்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செவகாடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் சேவியர் ஹென்றி ( வயது 41 ). இவரும் இவரது சகோதரியும் நேற்று முன்தினம் இரவு மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு வந்து ஜவுளி எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் லால்குடி அருகே உள்ள அகலங்காநல்லூரில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்துகொண்டிருந்தனர்.

அப்போது சமயபுரம் அருகே உள்ள பழூரில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ததால் சாத்தம்பாடி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26 ), லால்குடி அருகே உள்ள கீழே பெருங்காவூரை சேர்ந்த பவுல்ராஜ் ( 22 ) ஆகிய இளைஞ்ர்கள் பீர்பாட்டிலை உடைத்து குத்தி விடுவோம் என மிரட்டி விலை உயர்ந்த செல்போன், தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.

செயினை பறித்து விட்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த ஜெயதீபா வேகமாக சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ரோந்து பணியில் இருந்த சமயபுரம் போலீசார் விரைந்து இரண்டு இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த தங்க சங்கிலி, செல்போன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இரண்டு இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *