Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கிளியர் நல்லூர் கிராமத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திருவானைக்கோவில் தாண்டி மாம்பழச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என பேருந்து ஓட்டுநர் கத்தியதாகவும், சாலை ஓரத்தில் இருந்த நடைமேடையில் பேருந்து மோதி கவிழ்ந்துள்ளது.

இதில் பேருந்தில் பயணித்த 40 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். பேருந்து கவிழ்ந்த போது அவர்கள் அனைவரும் அலறி உள்ளனர். பேருந்து கவிழ்ந்ததில் அதன் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்துள்ளது. அதன் வழியாக பயணிகள் அனைவரும் வெளியே வந்துள்ளனர். இதில் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்படுள்ளது.

பின்னர் அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *