Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வணிகர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்களுக்கான உணவு விழிப்புணர்வு கூட்டம்

உணவு பாதுகாப்பு துறை சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டியில் உணவு வணிகர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்களுக்கான உணவு கலப்பட விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் சற்றே குறைப்போம் திட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தினை மாவட்ட நியமன அலுவலர் Dr. R. ரமேஷ்பாபு தலமையேற்று சிறப்புரையாக முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பு பற்றியும், உணவு கலப்படம் மற்றும் உரிமம் /பதிவு முகாமும் நடத்தப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் சுமார் 145 உணவு வணிகர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் உரிமம்/பதிவு முகாம் நடத்தப்பட்டு 135 உணவு வணிகர்கள் கலந்து கொண்டு பதிவு பெற்றனர்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வடிவேல், ஸ்டாலின், ஜஸ்டின் மற்றும் அன்புச்செல்வன் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *