அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா தலைமையில் தெப்பக்குளம் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக பேரணியை முன்னாள் மாநில குழு உறுப்பினர் எம். செல்வராஜ் துவக்கி வைத்தார். நிகழ்விற்கு இடைக்கமிட்டி செயலாளர்கள் அபுதாகிர், சுரேஷ் முத்துசாமி, எம் ஆர் முருகன், ராஜலிங்கம், ஏ.அஞ்சுகம், ஏ.பால்கிருஷ்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார் மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.இப்ராகிம், மாதர் சங்கத் தலைவர்கள் வை.புஷ்பம், க.ஆயிஷா, இளைஞர் பெருமன்றம் மாவட்ட தலைவர் முருகேசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சூர்யா மற்றும் முத்துலெட்சுமி, ஏர்போர்ட் ராஜா, க.முருகன், மார்சிம் கார்கி, விஷ்வா, ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியின் முடிவில் தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டு 100 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments