Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு – 10 பேர் காயம்

சென்னையிலிருந்து தென்காசி சென்ற  ஆம்னி பேருந்து (சக்திடிராவல்ஸ்) திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்தது.இதில் பயணம் செய்த  சக்தி என்ற இளைஞர் கால் துண்டானது. அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து நடந்தவுடன் பயணிகளை மீட்காமல் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தற்போது மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது பேருந்து அதிவேகத்தில் வந்து திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *