Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அரை கிலோ புளிக்கு அடி தடி – வி.ஏ.ஓ – வியாபாரிகள் மோதல்

திருச்சி கல்பாளையத்தில் வசித்து வருபவர் வி.ஏ.ஓ கலைவாணி ஸ்ரீரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் ( MAJ traders ) என்ற கடையில் புளி வாங்கி சென்றுள்ளார்.

இந்த புளி சரியில்லை உன்னிடம் தான் வாங்கினேன் என்று நேற்றிரவு (15.05.2023) கடைக்கார் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் இப்ராஹிம் கடையில் இருந்த மற்ற பெண்கள் வி.ஏ.ஓ கலைவாணியை தள்ளிவிட்டு விரட்டி விட்டனர். உடனே வி.ஏ.ஓ அங்கு கடை வைத்திருந்த உறவினர்களை அழைத்து வந்து கேட்ட பொழுது இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

இரண்டு தரப்பினரும் மாறி மாறி விரட்டி விரட்டி அடித்துக் கொண்டனர். அங்கிருந்த பெண்களும், ஆண்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர். பெண்கள் பாத்திரம் பொருட்களையும், அள்ளி வீசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்ற இரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனால் அந்த கடையில் இருந்த தக்காளி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அனைத்தும் சிதறியது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. விஏஓ உள்ளிட்ட இரண்டு தரப்பினரையும், காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைசில இந்த அக்கப்போர் அரை கிலோ புளியில் வந்தது என்பது அனைவரையும் நகைப்பிற்குரியதாக்கி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *