Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் தலைமையில், திருச்சி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

திருச்சி உறையூரில் இரண்டு நாட்களுக்கு முன் திருடு போன நகைகள் மீட்கப்பட்டதற்கு அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து சன்மானம் வழங்கினார். காவல் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தமிழக டிஜிபி அறிவுரைகளை வழங்கினார். பின்னர் தஞ்சை சரக காவல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்றார்.

https://www.threads.net/@trichy_vision

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *