Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு – உத்தரவு

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் மு.அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக  பராமரிக்கவும், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பிடம், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடைமேடையில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் போது மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ச.நா. சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *