Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

நிலக்கடலையில் இருந்து உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வரும் (29.8.2023) செவ்வாய் கிழமை காலை 10:30 மணி அளவில் தோகைமலை வட்டாரம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நிலக்கடலையில் இருந்து நிலக்கடலை வெண்ணெய் அல்லது பீனட் பட்டர்,

நிலக்கடலை பர்பி, நிலக்கடலை சாதப்பொடி தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நிலக்கடலையில் இருந்து மேற்கூறிய உணவுப் பொருட்கள் எவ்வாறு தயாரித்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் பயிற்சியும் நடைபெற உள்ளது. மேலும் உணவு தரச் சான்று எவ்வாறு பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார். மேலும் முன் பதிவு செய்ய 9750577700 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். முன் பதிவு அவசியம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *