Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சபரிமலைக்கு சென்று திரும்பிய வேன் விபத்து – 13 பேர் காயம்

மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள் பேட்டையை சேர்ந்த முத்து நாட்டார் தலைமையில் ஜயப்ப பக்தர்கள் குழு கேரளா சபரிமலை கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே வந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையை உடைத்து கொண்டு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

இதில் மயிலாடுதுறை பெருமாள் பேட்டையை சேர்ந்த முத்து நாட்டார் (45), சரவணன் (35), தங்கராஜ் (60), தங்கத்துரை (60), மணிகண்டன் (35) ரஞ்சித் (24), லோகநாதன் (40), வினோத் உள்ளிட்டோர் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முத்து நாட்டார் திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *