Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி நீதிமன்றத்தில் மூன்று நாள் இலவச தியான வகுப்பு

மூன்று நாள் நடக்கும் Heart fullness நடத்தும் இலவச தியான வகுப்பு (meditation camp) நடைபெற்றது. இந்த தியான வகுப்பை மாவட்ட நீதிபதி K.பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி N. S.மீனா சந்திரா ஆகியோர் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், சிவகுமார், விஜயநாகராஜன் தியான பயிற்சியாளர்கள் பழனியப்பன், ரமணி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து ஆகியோர் இருந்தனர்

இதற்கான ஏற்படுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார். இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சியின் பலன்கள் : 

1. மனதின் அமைதி, சமநிலை மற்றும் ஒழுங்குபடுத்துதல் மன அழுத்தத்தினை நீக்குதல்.

2. தூக்கம் சீராகுதல், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுதல். 

3. அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதி, மகிழ்ச்சி, திருப்தி, மற்றும் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை.

4. நேர மேலாண்மையும், படைப்புத் திறனும் சுயவிழிப்புணர்வும் மேம்படுதல்.

5. கவனம், மனங்குவித்தல், ஞாபகசக்தி, நினைவு கூர்தல் மேம்படுதல்.

6. நேர்மையான எண்ணங்கள், சிந்தனை மற்றும் சரியான புரிதல் வளர்தல்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *