திண்டுக்கல் மாவட்டம் ஒட்டச்சத்திரம் அருகே அனுப்பபட்டி பகுதியைச் சேர்ந்த திருமலைசாமி மகன் தண்டபாணி (60). இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு 50 மேற்பட்ட மாடுகளை கன்டெய்னர் லாரியில் ஏற்றி வருவதாக அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரவித்தனர்.
பின்னர் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் ஆந்திர மாநிலம் பதிவேடு கொண்ட லாரியை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக கண்டெய்னர் லாரியில் இருந்த மாடுகளை பறிமுதல் செய்த சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments