பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான பள்ளி மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்கியது.

திருச்சி புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கு ஒன்றிய அளவிலான பள்ளி மாணவிகளுக்கான சதுரங்க போட்டியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று செஸ் விளையாடினர்.

அப்போது பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அக்ஷரா என்ற மாணவியரிடம் ஆட்சியர் செஸ் விளையாடினார்.

தொடர் காய் நகர்த்தலுக்கு பின்னர் அபாரமாக விளையாடிய அக்ஷரா மாவட்ட ஆட்சியரை தோற்கடித்தார், பள்ளி மாணவிக்கு வாழ்த்துக்களை கூறி தொடர்ந்து அனைவரும் செஸ் போட்டியினைக்கற்று, சிறப்பாக விளையாட வேண்டுமாய் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           133
133                           
 
 
 
 
 
 
 
 

 25 July, 2024
 25 July, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments