Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை பிடித்த திருச்சி காவலருக்கு தலையில் வெட்டு!!

Advertisement

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் விஜய் ( 23 ). பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ஆவார்.

Advertisement

இந்நிலையில் பாலக்கரை காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சங்கிலியாண்டபுரத்திலிருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் நாகா வே பிரிட்ஜ் எதிர்ப்புறம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது அங்கு நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் தேடப்படும் குற்றவாளியான விஜய் ஓட்டி வர மற்ற இரு நபர்கள் வண்டியின் பின்புறம் அமர்ந்து இருந்தார்கள். 

Advertisement

விஜய் வண்டியில் வருவதை பார்த்த முதல் நிலை காவலர் வேல்முருகன் அவருடைய வாகனத்திற்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்தி, விஜயின் சட்டையை பிடித்து கீழே இறக்க முயற்சி செய்தபோது. தேடப்படும் குற்றவாளியான விஜயின் வண்டியில் இருந்த அவனுடைய நண்பர்கள் இருவரில் ஒருவன் கத்தியால் காவலர் வேலுமுருகனின் தலையின் இடப்புறத்தில் வெட்டி கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து வேல்முருகன் அருகிருந்த ஆட்டோவில் ஏறி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுப்பற்றி தகவலறிந்து வந்த சம்பவ இடத்திற்கு பாலக்கரை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறார். காவலரை வெட்டிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *