சசிகலா பூரண குணம் அடைய வேண்டி, திருச்சி வழிவிடு முருகன் ஆலயத்தில் நாக்கில் அலகு குத்தி வழிபட்ட திருச்சி தொண்டர்.

Advertisement
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் ஆட்டோ டிரைவரான செந்தில் என்பவர் சசிகலா பூரண குணம் அடைய வேண்டி இன்று திருச்சி ரயில்வே நிலையம் எதிரே உள்ள வழிவிடு வேல் முருகன் ஆலயத்தில் நாக்கில் அலகு குத்தி, ஒரு நாள் முழுவதும் மௌன விரதம் தொடங்கினார்.

Advertisement
ஆலயத்தில் தனி மனிதனாக வேண்டுதலை நிறைவேற்றி கொண்டு இருக்கும் போது அங்கு வந்த கண்டன்மெண்ட் காவல் நிலையத்தில்
முன்அனுமதி பெறாமல் நீங்கள் இதுபோன்று வழிபாடு செய்யக் கூடாது எனக் கூறி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement






Comments