Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கத்தில் ரவுடி படுகொலை – கைதான 3 வாலிபர்களின் கை, கால்கள் முறிவு

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமிநகரை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பரசன் (33). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த 28-ந் தேதி காலை உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுவிட்டு, ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது, 8 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த தினேஷ்பாபு (28), சென்னை காசிமேடு ஜி.எம்.பேட்டையை சேர்ந்த லோகேஷ் (23) உள்பட 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சேவல் சண்டை மற்றும் கபடி போட்டியின் போது தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்ததும் தெரியவந்தது. 

இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ்பாபு, லோகேஷ், ரகுபதி (23) ஆகிய 3 பேர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர். அங்குள்ள காம்பவுண்டு சுவரை ஏறி குதித்தபோது தவறி விழுந்ததில் லோகேசுக்கு கை உடைந்தது. தினேஷ்பாபு (28), ரகுபதி (23) ஆகியோரின் கால்கள் உடைந்தன. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *