Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆசிரியர் நழுவல் சார் நீங்க கிளாஸ் எடுக்கிறப்ப நான் போகல உட்காருங்க ஒரே சிரிப்பலை – திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலாய்ப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தான் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 90 வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருடன் பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் கலந்து கொண்டார்.

விழா மேடையில் ஏறி பேசிய சிவகார்த்திகேயன் கேம்பியன் பள்ளிக்கு வருவது தனக்கு பெருமை என்றும், அங்கு தான் படித்த போது இருந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து பெயர் சொல்லி அழைத்து பாராட்டினார். பின்னர் 2035 ல் பத்து ஆண்டுகள் கழித்து பள்ளியின் நூறாவது ஆண்டு விழாவிலும் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

மேலும் சிவகார்த்திகேயன் பேசுகையில் எனது மகளை அழைத்து வந்து இந்த பள்ளியை சுற்றி காண்பித்துள்ளேன், வரும் காலங்களில் எனது குழந்தைகளை அழைத்து வந்து கேம்பியன் பள்ளியை காண்பிக்க உள்ளதாக கூறினார். இப்படி சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டிருக்கும் போதே வள்ளுவன் என்கின்ற ஆசிரியர் கூட்டத்திலிருந்து எழுந்து நடந்து சென்றார்.

அதை கவனித்த சிவகார்த்திகேயன் சார் நீங்க பாடம் நடத்தும் போது நான் இப்படி பாதியில் எந்திரிச்சு வெளியே போயிருக்கேனா…. நான் பேசுவது பிடிக்கவில்லையா இப்படி எந்திரிச்சி போகிறீர்களே என மேடையிலேயே கலாயித்தார்……இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வள்ளுவன் திரும்ப தனது இருக்கைக்கு பெரிய வணக்கத்தை வைத்து வந்து அமர்ந்து கொண்டார். இதனால் விழா அரங்கே கலகலப்பாக ஆனது. 

பின்னர் பேசிய சிவகார்த்திகேயன் நான் படிப்பில் சுமார் தான் என்றும் கணக்கு பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்களை எடுத்து இருந்தேன். மேலும் இந்த பள்ளியில் சீட் கிடைப்பது என்பது கடினம் அதற்கு நுழைவுத் தேர்வு எல்லாம் வைப்பார்கள் நான் நுழைவு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் எனக்கு இந்த பள்ளியில் சீட்டு தர மறுத்து விட்டனர்‌. பின்னர் எனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு இந்த பள்ளியில் எனக்கு சீட் வாங்கி கொடுத்தார்.

நானும் பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தேன். நான் படிக்கும் காலத்தில் கலை நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொண்டதில்லை கல்லூரி சென்ற பின்னரே நான் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். ஆனால் இந்த பள்ளியில் ஆசிரியை ஒரு முறை என்னை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தார் அது ஆங்கில நாடகம் அதில் நான் பெண் வேடமிட்டேன் ரெமோ விற்கு முன்பு நான் பெண் வேடமிட்டு இந்தப் பள்ளியில் தான் நடித்தேன் என்றார். இப்படி தன்னுடைய பல பள்ளிக்கால நினைவுகளை சிவகார்த்திகேயன் விழா அரங்கில் பகிர்ந்து கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *