Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வருவேன் இனிகோ இருதயராஜ் வாக்குறுதி

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி.ரோடு, அல்லிமால் தெரு, பெரியகடை வீதி, ஒத்தைமால் தெரு, மேலபுலிவார்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்து சென்று வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் செய்தார்.

பின்னர் அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு செய்த அவர் வாக்காளர் மத்தியில் பேசுகையில்… திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இல்லாததால் மக்கள் பெரும் அவதிப்படுவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இப்பிரச்சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, பாலக்கரை பகுதி செயலாளர் மண்டிசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp8

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *