Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் 79 வது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கி, தியாகிகள் குடும்பங்களுக்கு கௌரவிப்பு

திருச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு  தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஏற்றி வைத்து 10 பயனாளிகளுக்கு 18 லட்சத்து 15 ஆயிரத்து 222 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நாட்டின் 79வது சுதந்திர தின விழா திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சரவணன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை பறக்க விட்டார். இதனைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பினரை பார்வையிட்ட பின்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

25 ஆண்டுகள் மாசற்று சிறப்பாக பணியாற்றி வரும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி பணியாளர்கள் 696 பேரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சரவணன் சான்றிதழ் வழங்கினார். 9 துறையை சார்ந்த 10 பயனாளிகளுக்கு 18 லட்சத்து 15ஆயிரத்து 222 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *