Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விபத்து பகுதியாகும் திருச்சி பஞ்சப்பூர் – சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி

திருச்சி மாவட்டம்
நாகமங்கலம்,மேக்குடி சேர்ந்த
மைக்கேல் ராஜ் திருச்சியில் இருந்து விளாத்திகுளம் செல்லும் ஆம்னி பஸ் 15/08/25 இன்று பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி- மதுரை மெயின் ரோட்டில் திருப்பும் பொழுது,
TN 48 BE 6184 PULSAR – என்ற இருசக்கர வாகனத்தில் வந்த மைக்கேல் ராஜ் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். மைக்கேல் ராஜ் மனைவி விமலா புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு குற்ற எண் 221 வ/பி 281 106 (i) பி என் எஸ்- ல் வழக்கு பதிவு செய்து, தனியார் பேருந்தை சிறை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி காலனி தெரு அய்யாக்கோட்டையூர் எட்டையாபுரம், சேர்ந்த ஆம்னி பஸ் ஓட்டுநர் ரவிக்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்தில் இறந்த மைக்கேல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர்.

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செயல்படுத்துவேண்டியதில் இருந்து இந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் செல்ல துவங்கி விட்டனர் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக புர காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 6 திசையில் இருந்தும் வாகனங்கள் வருகிறது இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் திக்கு முக்காடி வருகின்றனர் விபத்துக்கள் ஏராளமாக நடக்கின்றன பகலிலும் இரவிலும் எந்த புறத்தில் இருந்து வாருங்கள் ஓடும் என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கிடைக்கின்றனர் இதனால் தேசிய நெடுஞ்சாலை வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் தொடர்கிறது இதற்கு மாநகர காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *